இந்திய அணி பீல்டிங்கில் மோசமாக உள்ளது - முன்னாள் பயிற்சியாளர்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (21:51 IST)
இந்திய அணி பீல்டிங்கில் மோசமான உள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல்  நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி  டி-20  டி-20 உலகக் கோப்பை  தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடவுள்ளன.

இந்த   நிலையில் உலகளவில் கிரிக்கெட்டில் வலுமையான அணியான இந்தியா இப்போட்டியில் கோப்பை வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், தீபக் சாஹர், பும்ரா  உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய அணி பயிற்சியாளராக 7 ஆண்டுகள் பணியாற்றிய ரவிசாஸ்திரி, இந்திய அணி டி-20 போட்டியில் நம்பர் 1 அணியாக இருந்தாலும், பந்து வீச்சில் சிறந்து விளங்கினாலும் பீல்டிங்கீல் மோசமாக உள்ளதாக க்ருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, உலகக் கோப்பை, ஆசிய கோப்பையில் தோல்வியடைந்த இந்தியா இதில், கோப்பை வெல்ல வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்