அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth K

ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (13:48 IST)

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 23ம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

அதை தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி கனமழைகான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 - 24 வரை சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்