இந்த 2 காற்றழுத்த அமைப்புகளால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குன்னூர், மாஞ்சோலை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் கனமழை அதிகரிக்கும். கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 23 முதல் நவம்பர் 7 வரை பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.