அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (07:23 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக  சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் கிட்டத்தட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சில இடங்களில் மிதமான மழை சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்