லாட்டரி சீட்டு விற்ற முன்னாள் எம்.எல்.ஏ மனைவி! கையும் களவுமாக பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (16:48 IST)
முன்னாள் எம்எல்ஏ மனைவி லாட்டரி சீட்டு விற்பனை செய்ததை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தது சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சேலம் பகுதியில் ஆங்காங்கே லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்ததில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி முன்னாள் தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் என்பவரின் மனைவி மனோன்மணியம் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் தனது கணவரை 10 ஆண்டுகளாக பிரிந்து ஓமலூர் அருகே தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் அவர் தனது வருமானத்திற்காக 5 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்