பிரதமர் மோடி தமிழகம் வருகை: முக்கிய ஆலோசனையில் டிஜிபி..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:47 IST)
பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வர இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனையில் டிஜிபி ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வருகிறார் என்பதும் அன்றைய தினம் அவர் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, பி சென்னை கமிஷனர் ஆகியோர்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்