மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி: அதிரடி அரசாணை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:37 IST)
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது
 
கூட்டுறவு வங்கிகளிலிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2756 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
 
ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்