2 டோஸ் செலுத்தியிருந்தால் மதுபான விலை தள்ளுபடி: அதிரடி அறிவிப்பு!

புதன், 24 நவம்பர் 2021 (08:44 IST)
2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் மதுபான விலையில் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொது மக்களை காப்பதற்காக இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் 2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காட்டினால் மதுபானங்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
ஆனால் இந்த அறிவிப்பு மது குடிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்