இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு

திங்கள், 1 நவம்பர் 2021 (19:00 IST)
5 சவரன்களுக்குள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி என தமிழக அரசு சற்று முன்னர் அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பது தெரிந்ததே. இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்குள் பெறப்பட்ட 6 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள் ஆவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்