அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான 7 வழக்குகள் ரத்து!

வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:19 IST)
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த ஏழு வழக்குகளையும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. 
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விவகாரம், விவசாயிகளுக்கு எதிரான போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டிருந்தார் 
 
இதனையடுத்து அவர் மீது தனித்தனியாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேகேஎஸ்எஸ்ஆர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான 7 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மற்றும் கொண்டு
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்