கூட்டத்திற்கு பின் தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, "கரூரில் 41 பேர் உயிரிழந்தது மீள முடியாத சோகம்; காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இதற்குக் காரணம்" என்று குற்றம் சாட்டினார். அமைதியான கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது ஏன் என மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
	 
	கூட்டணி குறித்துக் கேட்டபோது, "ஒரு மாதத்துக்கு முன்பிருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நிர்வாக குழுவின் முடிவுகள் அனைத்தும் கட்சியின் தலைவர் விஜய்யிடம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.