"வாக்குகளைப் பெற முடியும் என்றால், மோடி மேடையில் நடனமாடவும் தயாராக இருப்பார். அவரது நாடகங்களால் திசை திரும்ப வேண்டாம். நாட்டில் ஏழைகளுக்கானது ஒன்று, ஒருசில பெரும் பணக்காரர்களுக்கானது மற்றொன்று என இரண்டு இந்தியாக்கள் உருவாகி வருகின்றன. இதுவே பிகார் வறுமையில் வாட காரணம்.
	 
	மகாராஷ்டிரம், ஹரியாணாவில் நடந்ததாக கூறப்படும் 'வாக்குத் திருட்டு' முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா கூட்டணி அதிகாரத்துக்கு வந்தால், அனைத்து சமூகத்தினரின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும், அரசியலமைப்பை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.