தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்: அதிர்ச்சி காரணம்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:33 IST)
தலைமை ஆசிரியரை பள்ளி ஆசிரியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள துவக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த ஆசிரியரை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும் என்று அவர் கூறியதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் வந்ததாக தெரிகிறது
 
 இந்த நிலையில் ஒரு கட்டத்தில் திடீரென ஆசிரியர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலைமையாசிரியர் நோக்கிச் சுட்டுள்ளார். இருப்பினும்  தலைமையாசிரியர் காயம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்