சாமியாரிடம் ஆலோசனை கேட்ட பங்குச் சந்தை முன்னாள் CEO வீட்டில் சோதனை!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (14:04 IST)
சாமியாரிடம் ஆலோசனை கேட்ட பங்குச் சந்தை முன்னாள் CEO வீட்டில் சோதனை!
சாமியாரிடம் ஆலோசனை கேட்டு பங்குச்சந்தையில் நடவடிக்கை எடுத்த பங்குசந்தையின் முன்னாள் சிஇஓ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான சென்னை சேலையூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
 
இவர் இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரிடம் ஆலோசனை செய்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாகவும் இதற்காக அவர் சாமியாருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்