வாரத்தின் முதல் நாளிலேயே மகிழ்ச்சியான செய்தி: சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

திங்கள், 5 செப்டம்பர் 2022 (09:41 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்றும் குறிப்பாக கடந்த வாரம் சென்செக்ஸ் இறக்கத்தில் இருந்தது என்பதும் தெரிந்ததே
 
 இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 30 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 158 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 17533 என்ற நிலையில் வர்த்தகமாகி  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் இதேபோல் பங்குச்சந்தை பாசிட்டிவ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்