நேற்றைய பெரும் சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த சென்செக்ஸ்!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (09:29 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்று காலையில் பங்குச்சந்தை தொடங்கியவுடன் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். 
 
அந்தவகையில் நேற்று 800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியவுடன் 460 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 430 என்ற புள்ளியில் சென்செக்ஸ் வர்த்தகம் ஆகிறது 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 145 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 460 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்