அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை உட்படப் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சொகுசு பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் சாதாரணப் பேருந்துகள் ஆகியவை சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட இருப்பதாகத் தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் தமிழகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.