வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

vinoth
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (05:42 IST)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்த தொடர் முடிந்ததும் நடக்கும் டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா மற்றும் ரியான் பராக் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ருத்துராஜ் மற்றும் சஹால் போன்றவர்கள் அணியில் இடம்பெறவில்லை. அதே போல தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்