கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் பெரிதாக எந்த வெற்றியும் பெறாமல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேசிய அணி பல தொடர்களை வரிசையாக தோற்று வருகிறது.
அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் டி 20 தொடரோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் கடைசி போட்டியில் விளையாடும் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் The guard of honour கௌரவத்தைக் கொடுத்து விடை கொடுத்துள்ளனர்.