இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் குயிண்ட்டன் டிகாக், ஹென்ரிச் கிளாசன், சுனில் நரேன் என பல திறமையான வீரர்கள் ஓய்வை அறிவித்து விட்டு லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றனர். அந்த வகையில் தற்போது நிக்கோலஸ் பூரன் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.