தற்காலக் கிரிக்கெட் பெரிதும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறிவிட்டது. ஐசிசி அமல்படுத்தும் புதிய விதிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே உள்ளன. அதனால் பவுலர்கள் பெரியளவில் சாதனைகள் செய்வது அரிதாகிவிட்டது.ஆனால் அதிலும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மிட்செல் ஸ்டார்க். மூன்று வடிவிலானக் கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னுடைய அனல் தெறிக்கும் பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்து வருகிறார்.