நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு உடல் நலக்குறைவு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (22:13 IST)
நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நமது   அண்டை நாடான  நேபாளத்தின் பிரதமராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி(61). இவர் நேற்று திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து,  அதிபர் பித்யா தேவி பண்டாரியின் செயலாளர், பேஸ்ராஜ், அ இன்ற செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிபர் தேவி பண்டாரிக்கு சுகாதாரப் பாதிப்புகள்  உண்டாகியுள்ளது.  அவருக்கு தற்போது காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், காத்மாண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் அமைந்துள்ள திரிபுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்