ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிக்கும் சாலையில், ஒரு குழந்தை பொம்மை காரில் சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவில், ஒரு முக்கிய சாலையில், பல கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்த ஒரு சாலையில், ஒரு குழந்தை பொம்பை காரில், சாலையை கடக்க முயன்றது. அதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
பல கார் ஓட்டுனர்கள், காரை நிறுத்தி, வளைத்து அதன்பின் சென்றனர். ஆனால், அந்த குழந்தை சிறிதும் பயமில்லாமல் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு, அதைக் கண்டு ஓடி வந்த ஒரு காவல் அதிகாரி, அந்த குழந்தையை மீட்டு அதன் தாயிடம் ஒப்படத்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.