ப்ரெட் துண்டுகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சூடான பின் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பின் காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, சர்க்கரை, கலந்து தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது வறுத்து வைத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.