மீண்டும் உருவாகிறதா பேட்ட கூடடணி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (10:52 IST)
பேட்ட படத்தின் மூலம் இணைந்த கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் கபாலிக்குப் பிறகு தன்னை புதிய தலைமுறை இயக்குனர்களிடம் ஒப்படைப்பதில் ஆர்வமாக உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்த பேட்ட படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி சுமாராக ஓடியது.

இந்நிலையில் இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜின் வேலை பிடித்திருந்ததால் ரஜினி மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என சொல்லி இருந்தாராம். இப்போது அரசியலுக்கு வரவில்லை என ரஜினி சொல்லிவிட்ட நிலையில் அதே கூட்டணியில் ஒரு படம் பண்ணுவதற்காக இப்போது பேச்சுவார்த்தை நடந்து அதற்கு மூவரும் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்