“என் காலில் அவர் விழுந்தார்… நாளை அவர் காலில்…? “ DSP ஆடியோ விழாவில் கமல் பேச்சு!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (09:27 IST)
விஜய் சேதுபதியின் DSP பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசான சளி மற்றும் இருமல் இருந்ததால் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய அவர் விஜய் சேதுபதி நடித்துள்ள DSP படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக விஜய் சேதுபதி அவர் முன் தலைகுணிந்து வணங்கி பூங்கொத்தை கொடுத்து வரவேற்றார்.

அப்போது பேசிய கமல்ஹாசன் “என்னைப்போலவே விஜய் சேதுபதியும் சினிமாவை நேசிப்பவர். நான் எப்படி மார்லன் பிராண்டோ முன் மண்டியிட்டு அவர் கையில் முததம் இடுவேனோ, அதுபோல இன்று அவர் என் காலில் விழுந்துள்ளார். நாளை இன்னொரு கலைஞன் அவர் காலில் அப்படி விழ உருவாகி வருவான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்