சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட வீடியோவும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்றது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் தொடங்கிய போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் இப்போது விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல்கள் பரவி வரும் நிலையில் பராசக்தி இந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.