மூன்று பாகங்களைக் கொண்டது கேப்டன் மில்லர்… அருண் மாதேஸ்வரன் தகவல்!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (09:31 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் “கேப்டன் மில்லர் படம் மூன்று பாகங்களைக் கொண்டது. இப்போது நாங்கள் இரண்டாவது பகுதியை எடுத்துள்ளோம். இந்த படம் வெற்றியடைந்தால், அதன் முன்கதையும், பின்கதையும் உருவாகும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்