2வது டி20 போட்டி: பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் இந்தியா தோல்வி

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (07:50 IST)
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் காரணமாக நேற்று இந்திய அணி தோல்வி அடைந்தது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் மற்றும் ஷிகர் தவான் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதனை அடுத்து இறங்கிய படித்தல் 29 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்தியா 132 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
இந்த நிலையில் 133 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இலங்கை அணியின் டி சில்வா 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பதும் அவர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணியாக இருக்கும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்