ஐபிஎல் -2023 : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (19:16 IST)
, 16 வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவுள்ளது.

இன்றைய போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஏற்கனவே சென்னை அணியுடனான முதல் போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான்  குஜராத் அணி சூப்பர் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி லக்னோ அணியுடன் தோல்வியடைந்தது.

இன்றைய போட்டியில், இரு அணிகளில் யார் ஜெயிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்