பாகிஸ்தானுக்கு 228 ரன்கள் இலக்கு : வழக்கம்போல தோற்க போகிறதா ஆப்கானிஸ்தான்?

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (20:00 IST)
எப்போதும் சுமாராகவே விளையாடும் ஆப்கானிஸ்தான் இந்த முறை 50 ஓவர்கள் முடியும்வரை நின்று விளையாடி 227 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 228 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியிருக்கிறது பாகிஸ்தான்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக விளையாடிய அஸ்கர் அஃப்கன், நஜிபுல்லாஹ் ஆகியோர் தலா 42 ரன்களை பெற்றனர். ஆனாலும் அரை சதம் அடிப்பதற்குள் விக்கெட் இழந்தனர். மற்றவர்கள் பாகிஸ்தானின் வேகப்பந்துகளை முடிந்தளவு தாக்குபிடித்து விளையாடினர். சஹிதி உள்ளே இறங்கி அடித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வந்த வேகத்திற்கு வெளியே போய்விட்டார். விக்கெட் இழக்காமல் விளையாடினாலும் கடைசியாக விளையாடியவர்களை 2 ஓவருக்கு 1 விக்கெட் என பதம் பார்த்தது பாகிஸ்தான்.

தற்போது களமிரங்கி இருக்கும் பாகிஸ்தானை தனது சாதூர்யமான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் தாய்நாட்டுக்கு திரும்பும்போது நல்ல பேராவது இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்