உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ. 5 லட்சம் சிக்கியது

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (10:36 IST)
சென்னையில் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்ட விவகாரம் போலீசார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நேற்று இரவு 10.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை குழு, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையர் கமீல் பாட்சாவின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இன்று அதிகாலை வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத பணமாக ரூ.  2.5 லட்சத்தை கைப்பற்றினர். அப்போது, அந்த அறையில் கமீல் பாட்சாவை சந்திப்பதற்காக கொடுங்கையூரை சேர்ந்த பில்டர் செல்வம் என்பவர் வந்திருந்தார். அவரிடமிருந்து ரூ.2.58 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டட்து. எனவே, மொத்தம் ரூ.5.8 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றியது.
 
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்