இந்நிலையில், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், “நான் இப்போது முதல்வராக பணியாற்றுகிறேன், கட்சி தான் இந்த பொறுப்பை எனக்குத் தந்தது.
அரசியல் என்பது எனக்கு முழுநேர வாழ்க்கை அல்ல. கட்சி எந்த பொறுப்பை வழங்குகிறதோ அதை மேற்கொள்கிறேன். ஆனால் உண்மையில், நான் ஒரு யோகி. எனவே, ஒருநாள் இந்த பதவியையும் விட்டு செல்லவேண்டும்.
தலைமையுடன் கருத்து வேறுபாடு இருந்தால், இந்த பதவியில் நீடிக்க முடியாது. தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது கட்சி முடிவு. எந்த காரணமும் இல்லாமல் யாரும் எந்தவிதமான கூற்றுகளும் கூறலாகாது” எனக் குறிப்பிட்டார்.