மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்; 6 பேர் போட்டியின்றி தேர்வு!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (16:18 IST)
மாநிலங்களவை எம்.பிக்களுக்கான தேர்தலில் வேட்புமனு அளித்த 6 தமிழ்நாட்டு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் காலியான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இடத்தை நிரப்ப தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார் ஆகியோரும், கான்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்