அமைச்சர் பொன்முடி வழக்கை நானே விசாரிப்பேன்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:28 IST)
அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கை நானே விசாரிப்பேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். 
 
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
 
 தானாகவே முன்வந்து  இந்த வழக்கை அவர் எடுத்துக்கொண்ட நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி கோரிக்கை விடுத்தனர்.  
 
ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த ஆனந்த் வெங்கடேஷ் பொன்முடி தொடர்பான சொத்துக் குறிப்பு வழக்கை நானே விசாரிப்பேன் என்று அறிவித்துள்ளார். 
இந்த வழக்கு அக்டோபர் 9ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்