டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (11:28 IST)
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளுக்கும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாரம் 27ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் வேட்பமனு தாக்கல் செய்துள்ளனர். 
 
தேர்தல் பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மற்ற பகுதிகளில் வழக்கம்போல் டாஸ்மார்க் கடைகள் இயங்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்