மேலும், சென்னையில் கார்பந்தயம் நடத்துவதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தன. ஆனால், எதிர்த்தவர்களை பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது என்று கூறிய துணை முதல்வர், "வெற்றிக்கு முன்பே தகுதி உள்ள வீரர்களை கொண்டாடினோம்" என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டபோது, அதற்கு நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் இருப்பதில்லை என்றும், தொடர்ந்து இதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நான் பேசும் போதெல்லாம் அவையில் இருப்பதில்லை என்றும் அவர் கூறினார்.