லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! – பிரபல தொழிலதிபர் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (12:57 IST)
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருடன் தொடர்புள்ளவர்கள் இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில் தொழிலதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்த 17 பேரில் கேசிபி நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷும் ஒருவர். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணி மற்றும் பலரின் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்