ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு: காங்கிரஸார் கொதிப்பு..!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (10:33 IST)
ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தில் திடீரென பிஎஸ்என்எல் கனெக்சன் நிறுத்தப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கேரள மாநிலம் வயநாடு என்ற தொகுதியில் தான் ராகுல் காந்தி எம்பிஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இதனை அடுத்து அவர் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்க முடியும் வரை அந்த தொகுதி காலியான தொகுதியாகவே கருதப்படும். இந்த நிலையில் ராகுல் காந்தியின் எம் பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் மற்றும் இணையதள இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம் துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது
 
 ராகுல் காந்தியின் எம் பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் இணைப்பு மற்றும் இணையதள இணைப்பை பி.எஸ்.என்.எல் துண்டித்து விட்டதாக கூறப்படுவதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்