மீண்டும் டிவி சீரியலில் நடிக்க போகிறாரா ஸ்மிருதி இரானி.. அவரே அளித்த விளக்கம்..!

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (17:18 IST)
முன்னாள் அமைச்சர்  ஸ்மிருதி இரானி மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தியை அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை  ஸ்மிருதி இரானி, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டார். அவர் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்து, மத்திய அமைச்சர் பதவி பெற்றார்.

ஆனால், 2024ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்ட  ஸ்மிருதி இரானி, சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது அவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை அவர் மறுத்துள்ளார். "அனுபமா" என்ற டிவி சீரியலில்  ஸ்மிருதி இரானி நடிக்க இருப்பதாக புகைப்படம் வெளிவந்தது, ஆனால் இந்த தகவல் பொய்யானது என்றும், அவர் டிவி சீரியலில் நடிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்