கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரின் நாக்கை வெட்டிய மனைவி!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (17:36 IST)
உத்தரகாண்ட் மாநிலம் மொராதாபாத் அருகே பெண் ஒருவர் இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்ததை தன்னுடைய கணவர் பார்த்ததால் அவர்களுடன் சேர்ந்து கணவரின் நாக்கை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஜிஜேந்தர் என்பவர் அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிற்றுகிழமை ஜிஜேந்தர் வீட்டிற்கு சென்ற போது அவரது மனைவி மீனாட்சி தனது கள்ளக்காதலர்கள் இரண்டு பேருடன் படுக்கையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
 
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் ஜிஜேந்தர் மனைவி மீனாட்சியை கண்டித்தார். இதனால் மீனாட்சி தனது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவர் ஜிஜேந்தரை தாக்கி அவரது நாக்கை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.
 
படுகாயமடைந்த ஜிஜேந்தர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு நாக்கில் 9 தையல் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜிஜேந்திரின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் மீனாட்சி மீது புகார் அளித்தனர்.
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தலைமறைவாக உள்ள மீனாட்சியையும், அவரது கள்ளக்காதலர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்