புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

Webdunia
வியாழன், 25 மே 2023 (11:38 IST)
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் திறக்கப்பட இருக்கும் நிலையில் இந்த கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
மேலும் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட 18 கட்சிகள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்றும் மக்களவை செயலகத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமான தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்