இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் பாம் பொண்டி கூறுகையில், "அதிபர் டிரம்ப்பின் கீழ், மடூரோ நீதித் துறையிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்காக அவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்," என்றார்.
மடூரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் 2020-ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, மடூரோவுடன் தொடர்புடைய 700 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.