இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், மத்திய அரசு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நோபல் பரிசு பெற வேண்டும் என்பதற்காக டிரம்ப் உலகில் உள்ள அனைத்து போரையும் நான்தான் நிறுத்தினேன் எனக் கூறிவரும் நிலையில், அவருடைய பேச்சை அமெரிக்க மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதுதான் உண்மையாக உள்ளது.