அக்டோபர் 6-ஆம் தேதி சில மாணவிகள் அளித்த புகாரை தொடர்ந்து, நிர்வாகம் உடனடியாக ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, குற்றம் சாட்டப்பட்ட மாணவரின் மடிக்கணினி, மொபைல் போன் உள்ளிட்ட சாதனைகளை பறிமுதல் செய்தது. அவற்றில் ஆட்சேபனைக்குரிய ஏஐ படங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஐஐஐடி பதிவாளர் ஸ்ரீனிவாஸ் இதனை உறுதிப்படுத்தியதுடன், மறுநாள் மாலை காவல்துறையில் முறையான புகார் அளிக்கப்பட்டு, டிஜிட்டல் ஆதாரங்கள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாணவரை காவலில் எடுக்க காவல்துறை குழு பிலாஸ்பூருக்கு செல்லும் என்று கூடுதல் கண்காணிப்பாளர் விவேக் சுக்லா தெரிவித்துள்ளார்.