SCO மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன், பிரதமர் மோடி ஆகஸ்ட் 30 அன்று ஜப்பானுக்கு செல்கிறார். அங்கு, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் வருடாந்திர இந்தியா-ஜப்பான் மாநாட்டில் பங்கேற்கிறார்.அதன்பிறகு, அங்கிருந்து அவர் சீனாவிற்குப் புறப்படுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், இந்த அமைப்பு டாலரின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுப்பதாகவும் விமர்சித்து வருகிறார். இந்தச் சூழலில், பிரதமர் மோடி SCO மாநாட்டில் பங்கேற்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்தியாவும் சீனாவும் சேர்ந்து அமெரிக்காவை எதிர்த்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.