இதனை அடுத்து நீதிமன்றத்தில் அந்த இளைஞர் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து பாஸ்புக்கில் உள்ள தொகைக்கு உரிய வட்டியுடன் அந்த இளைஞருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து அந்த இளைஞருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமாக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே சம்பாதித்து வரும் அந்த இளைஞருக்கு திடீரென ரூ.10 கோடி ஜாக்பாட் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பணம் என்னுடைய அப்பாவின் பணம், அவர் எனக்காக சேர்த்து வைத்த பணம், எனவே தான் நான் சட்ட போராட்டம் நடத்திய இந்த வழக்கை வென்று உள்ளேன் என்று அந்த இளைஞர் தெரிவித்தார்.