எப்.ஐ.ஆர் படத்திற்கு தடை: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:16 IST)
விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை மூன்று நாடுகள் தடை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மலேசியா, கத்தார் மற்றும் குவைத் ஆகிய மூன்று நாடுகளில் இந்த படம் தடை செய்யப்பட்டிருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியானதை அடுத்து இந்த மூன்று நாட்டு ரசிகர்களிடம் தனது மன்னிப்பை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டு உள்ளார் 
 
இருப்பினும் இந்த படம் இந்தியா உள்பட மற்ற அனைத்து நாடுகளிலும் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சர்ச்சைக்குரிய கதையம்சம் காரணமாக மேற்கண்ட மூன்று நாடுகளிலும் இந்த படம் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்