க்ரீத்தி ஷெட்டியுடன் இந்த காரணத்தினால்தான் நடிக்க மறுத்தேன்- விஜய் சேதுபதி சொன்ன காரணம்!

vinoth

ஞாயிறு, 9 ஜூன் 2024 (07:33 IST)
தென்மேற்குப் பருவக் காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து 50 படங்களில் நடித்துள்ளார். அவரின் 50 ஆவது படமாக நித்திலன் இயக்கியுள்ள மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி படத்தின்  மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நேர்காணல் கொடுத்துள்ள விஜய் சேதுபதி தான் நடித்த டி எஸ் பி படத்தில் க்ரீத்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “உப்பெண்ணா படத்தில் நான் அவருக்கு அப்பாவாக நடித்தேன். ஷூட்டிங்கின் போது அவரிடம் என்னை உன் நிஜ அப்பாவாகவே நினைத்துக் கொள் என்று சொன்னேன். அதனால்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மறுத்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்