கல்யாண ஆசை வந்துடுச்சு… முதலில் லிவிங் டு கெதர்- டிடிஎஃப் வாசனின் கருத்து!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (13:54 IST)
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பைக்கில் பிரபல பைக்கரான டிடிஎஃப் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடைசியாக சில வாரங்களுக்கு முன்னர் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் இப்போது சிறையில் இருக்கும் போது தனக்கு திருமண ஆசை வந்துவிட்டதாக வாசன் கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “சிறையில் இருக்கும் போது எனக்கு கல்யாணம் செய்துகொள்ளும் ஆசை வந்தது. ஆனால் முதலில் மூன்றுவாரம் லிவிங் டு கெதரில் வாழ்ந்த பின்னர்தான் திருமணம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்